Wednesday, 22 April 2015

எண்ணத் தொகுப்புகள்




Lock down பரிதாபங்கள் :
 தோசை சுடுறான் ,பாத்திரம் கழுவுறான் ,வீடு பெருக்குறான் ,செஸ் ஆடுறான் ,வீடியோ கால் பேசுறான் ,பொண்டாட்டி துணிய தொவைக்குறான் , எல்லாம் ஒரு நாலு நாளு தான் . நாலாவது நாள் வெளி உலகத்தை miss பண்றதா புலம்பி சாகுறான், சண்டை போட்றான் . அப்போ இந்த வீடு எதுக்கு ? இவங்களுக்குனு ஒரு உலகம் வீட்டுக்குள்ள இல்ல னு தான் புரிஞ்சுக்க வேண்டி இருக்கு . ஏதோ ரெண்டு பேரும்  வேலைக்கு போய்டுறதனால காலம் போயிடுது போல . அடிப்படையாவே இந்த நூற்றாண்டுக்கு இந்த கல்யாணம், வீடு system  எல்லாம் கொஞ்சம் திரும்ப யோசிச்சு மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய அவசியம் இருக்கு.
********************************************************************************
Quarantine kavithaigal
***********************


Miss  you  மனிதா !!
காற்று சொல்கிறது -
 ரவுண்டு ரவுண்டா சிகரெட் புகையுமா , சர்ரு புர்ருனு வண்டி புழுதியுமா என்னை எப்போவும் கதகதப்பா வச்சுருப்பியே ! எங்க போயிட்ட மனிதா ? i miss  you  மனிதா !!
ஆறு சொல்கிறது -
  சாயப்பட்டறையின்  வண்ண சாயத்துனாலயும், சோப்பு நுரையினாலும்  என்னை  எப்போதும் சோக்கா வச்சுருப்பியே ! எங்க போயிட்ட மனிதா ? i miss  you  மனிதா !!
பறவை சொல்கிறது  -
  நேரம் காலம் பாக்காம horn  அடிச்சு, எல்லாத்துக்கும் வெடி வெடிச்சு எப்போதும் எங்களை கொண்டாட்டமா
வச்சுருப்பியே ! எங்க போயிட்ட மனிதா ? i miss  you  மனிதா !!
மண் சொல்கிறது -
  என் மேல பூச்சி பொட்டு படாம மருந்தடிச்சு,எனக்குள்ள இருக்கும் மீத்தேன் ஈத்தேன்னு எனக்கே தெரியாத சக்தியெல்லாம்  வெளி கொண்டு வந்தியே ! எங்க போயிட்ட மனிதா ? i miss  you  மனிதா !!
மரம் சொல்கிறது -
  எங்க மழை புயல்னு வந்து சாச்சுடும்னு  நீயே உன் கை வலிக்க எங்களை வெட்டி பேப்பராக்கி   உயிரோட்டமா  வச்சுருப்பியே ! எங்க போயிட்ட மனிதா ? i miss  you  மனிதா !!

********************************************************************************
Arranged Marriage பண்றதும் underwear  வாங்குறதும் ஒன்னு தான் ..Trial  லாம் பாக்க முடியாது ..சரியா இருக்கும் னு நம்ப மட்டும் தான் முடியும் .

********************************************************************************

பொதுவா பேச ஆரம்பிக்கும் போது ladies  firstனு சொல்றது மரியாதை நிமித்தம்லாம் இல்ல ..

அவங்க என்ன moodல இருக்காங்கனு தெரிஞ்சுட்டு நம்ம பேசலாமேன்னு தான் ..

இத புரிஞ்சவன் குடுமபத்த ஓட்டிடுறான் .. :D

********************************************************************************

நல்லவனாய் நடிப்பது தான் கஷ்டம் ..

நல்லவனாய் இருப்பது மிக எளிது ..
********************************************************************************
ஷாப்பிங் மால்ல , சின்ன பையன்  அப்பாட்ட காஸ்டலியான கார் பொம்மை கேட்கும் போது ...பக்கத்துல இருக்குற இன்னொரு  கார் பொம்மைக்கு பண்ணுவான் பாருங்க மார்கெட்டிங்குகு ...அய்யய்யய்யயோ பில்கேட்ஸ்லாம் பிச்சை எடுக்கணும் .

********************************************************************************
எல்லாமே சீக்கிரம் பெற துடிக்கும் நாம் சாவை மட்டும் தள்ளி வைக்கிறோம் .
********************************************************************************

என்றோ ஒரு நாள் மீண்டும் உன்னை என் வாழ்வில் சந்திக்க நேர்ந்தால்  எப்படி நான் இருக்க வேண்டும் என்று தினம் தினம் கண்ணாடி முன் ஒத்திகை பார்த்து கொள்கிறேன்...
********************************************************************************

இந்த வாரம் ஊர் திருவிழா இருக்குடா , வா என்றேன் ... வரவில்லை..

சொந்தகாரங்க கல்யாணம் இருக்குடா  வா என்றேன் ... வரவில்லை..

தாத்தாக்கு உன்னை பார்க்கணும் போல இருக்குதாம்டா ,வா என்றேன் ... வரவில்லை..

அம்மா பிறந்தநாளுக்கு கண்டிப்பாக நீயும் , வா என்றேன் ... வரவில்லை..

மகனே , புதுசா 50 mbps speed Internet  connection வாங்கியிருக்கேன் டா என்றேன் ..


வாரம்  தவறாமல் வர தொடங்கினான் என் அன்பு மகன் ...


********************************************************************************
நீ பதிலளிக்க தொடங்கும் போது தான்  கேள்விகளும் அதிகமாகின்றன...

 உன் வேலையை மட்டும் உருத்தாய் செய்...

காலம் பதில் சொல்லி கொள்ளட்டும் ...
********************************************************************************
மகன்/மகள்  : அப்பா நான் ஒரு பொண்ண / பையனை  காதலிக்குறேன்...

அப்பா : நம்ம ஜாதியா ?


இந்த கேள்வி ஒழியும் போது வந்து கோஷமிடுங்கள்  எங்கள் தலைமுறைக்கு குடும்பம் நடத்த போதிய பொறுப்பில்லையென்று ...
********************************************************************************

சுதந்திரத்திற்கும் , வாய்ப்புகளுக்கும்  சூழலை சுட்டி காட்டாமல் உழைப்பவனே  இங்கு உயர்கிறான்.
********************************************************************************
அடித்து விளையாட கூடாது என்பதையே அடித்து தான் சொல்லி கொடுக்கின்றோம்  குழந்தைகளிடம்...

********************************************************************************
அப்போ :

விழியில் விழுந்து ,இதயம் நுழைந்து , உயிரில் கலந்த உறவே ....

இப்போ..

missed call  கொடுங்க ...கல்யாணம் முடிங்க...
                                                              - Bharat  matrimony

என்ன கொடுமை சார் இது  :P


********************************************************************************

2050 ல எப்பிடியும் இந்தியா பணக்கார நாடா மாறிடும்....

விக்கிற விலைவாசிக்கு சாப்பிட முடியாம  பசியிலையோ...

புதுசு புதுசா வர்ற நோய்க்கு தனியார் ஆஸ்பத்திரில பில் கட்ட முடியாமையோ எல்லா ஏழையும் சீக்கிரம் செத்துருவான்..



அப்புறம் இந்தியால பணக்காரன் மட்டும்தானய்யா வாழப் போறான்...இந்தியா பணக்கார நாடா ஆயிடும்..


கவலைபடாதீங்க ...

********************************************************************************

பசங்களுக்கு எப்போவுமே உயிர கொடுக்குற பொண்ண விட உயிர  எடுக்குற பொண்ணத்  தான் புடிச்சு தொலையுது...என்ன கருமமோ !!!
********************************************************************************
இன்றைய இளைஞர்கள் அதிகாலை எழுகிறார்களோ  இல்லையோ அலாரம் மட்டும் மட்டும் தினசரி வைக்கிறார்கள் ...
********************************************************************************
கலர் tv , grinder , மிக்ஸி , laptop .....இதெல்லாம் கொடுத்த அரசாங்கம் இதுக்கு பதிலா  ஒரு கறவை மாடு கொடுத்திருக்கலாம்....உங்க பால் விலை உயர்வுல  இருந்து தப்பிச்சு நிம்மதியா ஒரு டீயாவது   குடிக்கலாம்.

********************************************************************************
நீ காதலிக்கும் நபரை விட உன்னை காதலிக்கும் நபரை  திருமணம் செய்து கொள் என்று சொல்லுவதில்

 ஒரு ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ இருக்கத் தான் செய்கிறது.

********************************************************************************

கனவு காண்பதோ ;

கனவை அடைய முயற்சித்து தோற்பதோ தப்பில்லை ;

அடுத்தவனின் கனவை விமர்சனம் மட்டுமே செய்வது தான் பரிதாபம் ..


********************************************************************************

Sad fact:
If half of the people who bunked the college and offices on the semi final world cup, came out to road on the strike day (karnataka dam issue) we would have think about a change in our BHAARAT..


********************************************************************************
இது தான் நான் என்று முடிவு எடுக்காதீர்கள் .. இதுவும் நான் தான் என்று குழம்பி கொண்டே இருங்கள் ...


*******************************************************************************
தலை சீவுறதுக்கு கண்ணாடி முன்னாடி நின்னா தப்பில்ல ... அதை கலைச்சு விடுறதுக்கு ஏன்டா இவ்ளோ நேரம் நிக்குறீங்க ....

*******************************************************************************

தொலைக்காட்சியில் சிறப்பு பொங்கல் நிகழ்ச்சிக்கும் ,
காதல் பாடல்களில் பசுமை வயல் காட்டுவதற்கும் ,
ஏழைச் சிறுவனை புகைப்படம் எடுப்பதற்கும் ,
தமிழ் கலாச்சார பெருமை பேசும் நேரத்திற்கும் மட்டுமே
இங்கே கிராமங்கள் கவனிக்கப்படுகின்றன ....
மற்றபடி ஏனோ இந்த கிராமம் எனும் முதுகெலும்பை திரும்பி பார்க்க
யாராலும் இயலவில்லை போலும் பாவம் ..

*******************************************************************************
கொடுத்த வாக்குறுதிகள் தேர்தல் மை போல காற்றில் கறையுமென தெரியாமல் கழிந்தது என் முதல் வாக்களிப்பு...
வாக்களித்தேன் ...என் ஈழம் இழந்தேன் ...
இதோ என் இரண்டாம் தேர்தல் ..
இழக்க இன்னும் பெரிதாக இல்லை என அச்சமின்றி வாக்களிக்கின்றேன் புரையோடிய ஈழ வடுவுடன்.
-- மீதமுள்ள தமிழன்.

*******************************************************************************

Losing a cricket match is not a nation's shame;A farmer suicide is .

*******************************************************************************

இன்றைய தலைமுறை எழுதுவதற்கு தவறுவதில்லை ....படிக்கத் தவறினாலும் கூட ...
#வருத்தம்

*******************************************************************************
உலகம் உள்ளங்கையில் என்னும் ஆசையில் தான் smartphone வாங்கினேன் ... பிறகு தான் தெரிந்தது உலகம் சுருங்கவில்லை , நான் தான் என் உலகத்தை உள்ளங்கை அளவில் சுருக்கி கொண்டேன் என்று...

நண்பனின் பிறந்தநாளை facebook இல்  தேடும் பொழுது தான் உணர்ந்தேன்  இணையத்தில் உள்ள இணைப்பு இதயத்தில் இல்லாததை ...

 தொலைவில் இருப்பவனிடம் அதிகமாய் பேச போகிறேன் என நினைத்து  அருகில் இருப்பவனை  தொலைத்தே விட்டேன் ...

இரண்டு  sim card  போட்ட என்னால் இரண்டு  நிமிடம் கூட தாய் தந்தையினருடன் முழு மனதாய் பேச நேரமின்றி போனேன் ...

குழந்தையின் மழலை சிரிப்பும், குயிலின் கானக் குரலும்  கேட்டு விடாதபடி இருக்கமாய் earphones அணிய பழகிக் கொண்டேன் ...


வீட்டின் ஜன்னலோரம் படுத்து உலகை ரசிக்காமல் plugpoint  அருகில் படுத்து மீதமிருக்கும் இரவையும் பொழுதாய் போக்கினேன் ...

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமாம் ... நான் புதிதாய் கற்று கொண்டேன் LOL ,ROFL என்று சத்தமின்றி சிரித்து கொள்ள ...


இறுதியில் எனக்கே நான் மூன்றாம் மனிதனாய் போனேன் ..

*******************************************************************************
கவிதைகளையும் கண்ணாமூச்சி ஆட வைக்கும் உன் புரியா விழி மொழி அழகுகள்...
*******************************************************************************

வகுப்புக்கு லேட்டா வர்றவன் தியேட்டர்க்கு சீக்கிரமா வர்றதும்  ;

வகுப்புக்கு சீக்கிரம் வர்றவன் தியேட்டர்க்கு லேட்டா  வர்றதும்

ஒரு நிதர்சனமான உண்மை தான் :)


*******************************************************************************

காதல் சலனம் தான் ...இருந்தும் ரசிக்கிறேன்   ...அரவமற்ற  காட்டுக்குள் சருகு மிதித்தது போல  ...

*******************************************************************************

முதல் காதல்  ,முதல் மழைத் துளி ...இரண்டும் ,  நாம் விரும்பாவிடினும் நம்மை நனைத்து விடத்தான் செய்கிறது   :)

*******************************************************************************

காயமற்றவன் காதலில் 'விழுந்திருக்கவே' முடியாது :)


*******************************************************************************

கண்ணீரும் சிரிப்பும் சந்திக்கும்  முரண்பாட்டுக் கிரகணம் -காதல் :)


*******************************************************************************

இன்றும் சொல்லாமலே பிரிந்தான் காதலை ...
 நிழலுக்கு பூச்சூடியவனாய் ...

*******************************************************************************

நல்ல நட்பை தேடுவது கூழாங்கல்லினுள் வைரம் தேடுவது போல..ஆனால் கிடைத்துவிட்டால் நம்  மதிப்புயரும் :)

*******************************************************************************

காதலனாய் கொடுத்த அனைத்தையும் வைத்து கொண்டு காதலை மட்டும் வேண்டாம் என்றாள் ...

*******************************************************************************
சில சமயங்களில் மௌனமே அதிகம் புரிய வைக்கிறது  ...

*******************************************************************************

கானல் நீரும் தாகம் தீர்த்தது காதல் உணர்ந்த பின்னால்   :)

*******************************************************************************

திரும்ப கொடுத்தாய் என் இதயத்தை சிற்சில காயங்களுடன் ...பரவாயில்லை பெண்ணே ...நம் நினைவுகள் மருந்தாகட்டும் !!!


*******************************************************************************

 அவள் என்னை ஏதோ கேட்டாள் ....அறிவுக்கு தெரிந்திருந்தும்  மனம் தெரியாது என்றே தலையாட்ட சொன்னது ...அவள்  விவரிக்கும் அழகை ரசிப்பதற்காகவே :)


*******************************************************************************

காதலில் உடைந்தேன் ...
கண்ணீர் கடந்தேன் ...
மரணம் வென்றேன்...
மனம் கொன்றேன்  ...
யுகம் முடிந்தும் இதயச்சகம் திரும்ப கிடைக்க பெறாதவனாய் ....
வாழ்கிறேன் ...??


*******************************************************************************

என்னை எனக்கே பிடித்தது அவளால் !!!!

*******************************************************************************
காதல் கடிதம் :
                இருதய  சறுக்கல்களின் கிறுக்கல்கள்  !!!


*******************************************************************************
இன்று காலையும் அவள் முகம் தான் கனவில் ...ஆனால் கலைந்து போனது ...இந்த சில நிமிட காதல்களால் சிலிர்த்து தான் போகிறேன் தினமும் !!!!!

*******************************************************************************
தயக்கங்கள் தொடர்கதை  ஆயினும் சலிக்கவில்லை பெண்ணே !! காத்திருக்கிறேன் முடிவுக்காக !!!

*******************************************************************************
தமிழ் என்னும் கடலின் கடைசி துளியையும் ருசித்து விட்டேன் ...இன்னும் மிச்சமுள்ளது உன் எழுதப்படாத அழகு !!!

*******************************************************************************


No comments:

Post a Comment