Saturday, 21 March 2015

முடிஞ்சா.....

                                          

முடிஞ்சா வருஷத்துக்கு ரெண்டு மரம் நடு , 

முடிஞ்சா வயசானவங்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு  பஸ்ல இடம் கொடு ,


முடிஞ்சா தண்ணீரை விரயம் பண்ணாம செலவழி ,


முடிஞ்சா பக்கத்துல இருக்குற இடங்களுக்கு வண்டில போகாம நடந்து பழகு ,


முடிஞ்சா ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மொபைல் பார்க்காம வேலை செய் ,


முடிஞ்சா உன்னோட சொந்த வேலையை நீயே செய்ய பாரு ,


முடிஞ்சா அப்பா அம்மா கூட 2 மாசத்துல ஒரு நாள் முழுசா செலவழி,


முடிஞ்சா உன் இடத்த  சுத்தமா வச்சுக்க முயற்சி பண்ணு ,


முடிஞ்சா ஒரு ஏழை பையனுக்கு மாசத்துல  ஒரு வேளை நல்ல சாப்பாடு வாங்கி கொடு ,


முடிஞ்சா சிறு வியாபாரிகளிடம்  பேரம் பேசாம பொருட்கள் வாங்கு  ,


முடிஞ்சா தேவைக்கு அதிகமான துணிகளோ , காலணிகளோ வாங்காம இரு ,


முடிஞ்சா தமிழ் தெரிஞ்சவன் கிட்ட தமிழ்ல பேசி பழகு ,


முடிஞ்சா லஞ்சம் கொடுக்காம, பொய் சொல்லாம நேர்மையா இரு ,


முடிஞ்சா அடுத்தவன் செய்ற புது முயற்சிகளை பாராட்டு ,


முடிஞ்சா சின்ன சின்ன விஷயத்துக்கு கோபப்படாம, குறை சொல்லாம  இரு ,


முடிஞ்சா பொது இடங்களில் அடுத்தவன தொந்தரவு பண்ணாம இரு ,



முடிஞ்சா மேல சொன்னதுல ஏதாச்சும் ஒரு விஷயத்த எப்போதும் செஞ்சு பாரு :)




No comments:

Post a Comment